Monday, November 3, 2025

சரண கமலாலயத்தை (சுவாமிமலை) திருப்புகழ்

 சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்

தவமுறைதி யானம் வைக்க அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை கமழுமண மார்க டப்ப மணிவோனே தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழகதிரு வேர கத்தின் முருகோனே.

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி என்பது தமிழ்நாட்டில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோவிலில் அருள்புரியும் அபிராமி தெய்வம் மீது பாடிய கவிதைகளின் த...