கண்ணனை மணம் செய்து கொள்வதுபோல் ஆண்டாள் கணவு கண்டாள்; தோழி! நகரத்தில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன; பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருமணப்பந்தலிட்டு முத்துச் சரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. முகூர்த்த வேளை. கண்ணனோடு அமர்ந்திருக்கிறேன். கண்ணன் என்னைப் பாணிக்கிரகணம் செய்துகொள்கிறான். கையைப் பிடித்துக்கொண்டு தீ வலம் வருகிறான். என் காலைப் பிடித்து அம்மியின்மேல் எடுத்துவைக்கிறான். இவை எல்லாம் விரைவிலேயே நிறைவேறக் கண்ணன் அருள்வானோ! என்று தோழியிடம் கூறி மகிழ்கிறாள். பகவானுக்கு இடாத அன்னமும், வாரணமாயிரம் அனுஸந்திக்காத திருமணமும் பயனற்றவை. ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளில் நடக்கும் திருமணத்தை ஆண்டாள் திருக்கல்யாணம் என்றே சொல்லலாம். கல்யாணத்தில் சீர் பாடல் கட்டத்தில் வாரணமாயிரம் அனுஸந்திப்பது வழக்கம். இப் பாடல்களைக் கேட்கும் புதுமணத் தம்பதிகள் விரைவிலேயே ஞானமும் பக்தியும் நிறைந்த நன்மக்களைப் பெற்று மகிழ்வார்கள்
1.வாரணம் ஆயிரம்
கண்ணன் கோதையை மணம்புரிய, ஆயிரம் யானைகள் புடைசூழ நகர் வலம் வருதல்.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.
பாடல் விளக்கம்
கோதையைத் திருமணம் செய்துகொள்ளக் கோவிந்தன் மணக்கோலம் கொண்டு வருகிறான். அப்படி வரும்போது அவனைச் சுற்றி ஓராயிரம் யானைகள் உடன் வருகின்றன. அவனை அந்த ஊரே பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கிறது. இவ்வாறு கண்ணன் மணப்பந்தலுக்கு வரும் அழகையும் கம்பீரத்தையும் தோழியிடம் சொல்லிப் பூரிக்கிறாள் கோதை.
2.நாளை வதுவை மணம்
மணப்பந்தலில் மாதவன் பிரவேசித்தல்.
நாளை வதுவை மணமென்று நாளிட்டு பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.
பாடல் விளக்கம்
3. இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம்
இந்திரன் முதலிய தேவர்கள் மகள் பேசி மந்திரித்தல்.
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து மந்திரக்கோடி உடுத்தி மணமாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.
பாடல் விளக்கம்
தோழீ, கண்ணனுக்கும் எனக்கும் நடக்கும் திருமணத்தைக் காண, இந்திரன் முதலிய தேவர்கள் மாப்பிள்ளை வீட்டாராக இந்தப் பூவுலகத்துக்கு வந்திருந்து, கண்ணனுக்கு மணமகளாக என்னைத் தரும்படி கேட்டு நிச்சயித்தனர். அதன்பின், கண்ணனின் உடன் பிறந்தாளான துர்க்கை எனக்குத் தூயதான புதிய ஆடையை உடுத்தி வாசனையுள்ள மலர்மாலையும் அணிவித்தாள், இவ்வாறு கனாக் கண்டேன்.
4. நாற்றிசைத் தீர்த்தம்
தீர்த்தம் நல்கிக் காப்பு நாண் கட்டுதல்.
நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்றன்னை காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.
பாடல் விளக்கம்
5. கதிரொளி தீபம்
மாப்பிள்ளை அழைப்பும் மணமேடை புகுதலும்.
கதிரொளி தீபம் கலசமுடனேந்தி சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.
பாடல் விளக்கம்
6. மத்தளம் கொட்ட
மத்தளம் கொட்டக் கைத்தலம் பற்றுதல்.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்.
பாடல் விளக்கம்
7. வாய்நல்லார்
கோதையின் கைப்பற்றிக் கேசவன் தீவலம் வருதல்.
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக் காய்சின மாகளிறன்னான் என் கைப்பற்றித் தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்.
பாடல் விளக்கம்
8. இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிப்பித்தல்.
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்.
பாடல் விளக்கம்
9. வரிசிலை வாள்முகம்
கைமேல் கைவைத்துப் பொரியிடுதல்.
வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.
பாடல் விளக்கம்
10. குங்குமம் அப்பி
ஆனைமேல் சென்று மஞ்சனம் ஆடுதல்.
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலம்செய்து மணநீர் அங்கவனோடும் உடன் சென்று அங்கானைமேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.