Tuesday, May 30, 2023

இருவர் மயலோ - திருவருணை திருப்புகழ்

இருவர் மயலோ - திருவருணை திருப்புகழ்

.... சொல் விளக்கம் ......... இருவர் மயலோ ... வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவியர் மீது நீ கொண்ட ஆசையோ? அமளி விதமோ ... அல்லது உன் திருக்கோயில்களில் விதவிதமாக நடக்கும் ஆரவாரங்களோ? எனென செயலோ ... வேறு என்னென்ன நிகழ்ச்சிகளோ? (எனக்குத் தெரியாது) அணுகாத இருடி அயன்மால் அமரர் அடியார் ... உன்னை 

அணுகமுடியாத முநிவர், பிரமன், மால், தேவர், அடியார் இசையும் ஒலிதான் இவைகேளாது ... இத்தனை பேரும் முறையிடும் ஒலிகள் என் செவியில் விழாதபோது, ஒருவன் அடியேன் அலறு மொழிதான் ... யான் ஒருவன் மட்டும் தனியாக இங்கே அலறும் மொழிகளைப் பற்றி ஒருவர் பரிவாய் மொழிவாரோ ... யாரேனும் ஒருவர் அன்போடு வந்து உன்னிடம் தெரிவிப்பார்களோ? உனது பததூள் புவன கிரிதான் ... உன் பாதத்தில் உள்ள தூசானது பூமியிலுள்ள மலைகளுக்குச் சமம். உனது கிருபாகரம் ஏதோ ... அப்படியென்றால் உன் திருவருள் எவ்வளவு பெரியதோ? (யான் அறியேன்). பரம குருவாய் அணுவில் அசைவாய் ... மேலான குருமூர்த்தியாய், அணுவிலும் அசைவு ஏற்படுத்துபவனாய், பவன முதலாகிய பூதப் படையும் உடையாய் ... காற்று முதலிய ஐம்பெரும் பூதங்களை ஆயுதமாக உடையவனே, சகல வடிவாய் பழைய வடிவாகியவேலா ... எல்லா உருவமாயும், பழமையான உருவத்திலும் அமைந்த வேலனே, அரியும் அயனோடு அபயம் எனவே ... திருமாலும், பிரம்மனும் உன்னிடம் அடைக்கலம் புக, அயிலை யிருள்மேல் விடுவோனே ... உன் வேலாயுதத்தை இருள் வடிவம் எடுத்த சூரன்மேல் செலுத்தியவனே, அடிமை கொடுநோய் பொடிகள் படவே ... இவ்வடியேனுக்கு ஏற்பட்ட தொழுநோயைத் தூளாக்கிய* அருண கிரிவாழ் பெருமாளே. ... திருவண்ணாமலையில் வாழ்கின்ற பெருமாளே. * அருணகிரிநாதர் வாழ்க்கையில் அவருக்கு உற்ற தொழுநோயை முருகனது அருள் முற்றிலும் குணப்படுத்திய நிகழ்ச்சி இங்கு பேசப்படுகிறது. 

கல்வியில் சிறந்து விளங்க அகஸ்தியர் அருளிய மந்திரம் – ” நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி”

Saturday, May 27, 2023

கருப்பு கவனி அரிசி மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவ பயன்கள்

Dr.Sivaraman speech on walking | நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

#திருப்புகழ் #அருணகிரிநாதர் - கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி

திருமூலர் அருளிய மூச்சுப்பயிற்ச்சி #பிராணாயாமம்

Monday, May 15, 2023

திரு அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பு.

Thiruppugazh Palani Arumugam Arumugam திருப்புகழ் ஆறுமுகம் ஆறுமுகம் பழநி

எண்கண் திருப்புகழ்

சண்முக கவசம்

சண்முக கவசம் விளக்கம்

அனைத்து நோய்களையும் தீர்க்க வல்ல ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம்

திருப்புகழ் நெருப்பென்று அறிவோம் யாம் - சினத்தவர் முடிக்கும்.....

கந்தர் அனுபூதி

Sunday, May 7, 2023

மனதில் உறுதி வேண்டும் . #பாரதியார்


 

Kandar Shashti Kavacham

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பகை கடிதல் மந்திரம்

நன்மையும் தீமையும் கலந்தது தான் வாழ்க்கை. இன்றைய காலகட்டத்தில் நண்பனும் எதிரியும் நம் அருகிலேயே தான் இருப்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் ஒருவன் தன்னுடைய எதிரி யார் என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இப்படி கூறுவதால் எதிரியை அழிக்க தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை நமக்கு நன்மை செய்பவர்கள் யார்,தீமை செய்பவர்கள் யார் என்ற புரிதல் நமக்கு கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்காக தான் நம் எதிரியை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறுவதற்கான பொருள். சரி நாம் அவர்களை பற்றி கருத்தில் கொள்ளாமல் நம் பணிகளை செவ்வனே செய்து கொண்டு செல்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் நமக்கு எதிரியானவர்கள் நம்மை அப்படி பாவிக்கிறார்களா நிச்சயமாக மாட்டார்கள் அவர்கள் நமக்கு கெடுதல் செய்வதால் தானே நமக்கு எதிரிகளாகவே இருக்கிறார்கள். அவர்களிடம் சரிக்கு சமமாக நாமும் எதுவும் செய்யாமல் இந்த ஒரு மந்திரத்தை கூறி இந்த தெய்வத்தை சரணடைந்தாலே போதும். அந்த தெய்வம் வேறு யாரும் இல்லை அது கந்த கடவுள் தான். அந்த மந்திரம் பகை கடிதல்.

மற்ற தெய்வங்கள் எல்லாம் இருக்கும் போது இவரை மட்டும் எதற்கு நாம் சரணடைய வேண்டும். இவர் மட்டும் தான் எதிரிகளை நம்மை நெருங்க விடாமல் காப்பாற்றுவரா, மற்ற தெய்வங்கள் காக்க மாட்டார்களா என்றால் அனைத்து தெய்வங்களும் காக்க தான் செய்வார்கள் இதில் சந்தேகம் இல்லை. ஆனால் சில தெய்வங்கள் சில விஷயங்களுக்கு முதற் கடவுளாக இருப்பார்கள். அந்த வகையில் இந்த கந்த பெருமான் எதிரிகளை இல்லாமலே செய்து விடும் சூரசம்ஹார மூர்த்தியாக விளங்குபவர். அதனால் தான் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட இவரை அணுக வேண்டும் என்று கூறுவதற்கான காரணம்.



வேல்மாறல் மகாமந்திரம்

#வேல்மாறல் மகாமந்திரம் pic.twitter.com/3CGg4I7pYr — Selvaraj Venkatesan (@niftytelevision) July 15, 2024