Tuesday, August 5, 2025

நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி


நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையறு மனங்கேட்டேன் - நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும் - சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன் - இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

மூன்றாம் பிரையில் சிவனின் ஒளி,உள்ளம் திறந்து அவன் நாமம் பாடு

ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! மூன்றாம் பிரையில் சிவனின் ஒளி, உள்ளம் திறந்து அவன் நாமம் பாடு, ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! மலையும் கடலு...