Thursday, March 19, 2026

Happy Uagadi

వచ్చెను ఉగాది వసంతం వచ్చెను

మావి చిగురులు కొత్తగా మొలిచెను పచ్చడి తీసి పంచుకుందాం ఆనందం కొత్త సంవత్సరం శుభమైన శుభాకాంక్షలు! చిగురాకులు తీపి తిరస్కారం చూపినా ఉప్పు కారం కాస్త బాధలు తెచ్చినా చేదు కాస్త ఉండొచ్చు జీవితంలో కానీ పచ్చడి లాగే అన్నీ మంచివే కదా! వచ్చెను ఉగాది వసంతం వచ్చెను మనసు నిండా ఆశలు మొలిచెను మామిడి పూలు చూసి మురిసిపోదాం కొత్త కలలు కట్టుకుందాం ఈ రోజు! నెయ్యి బెల్లం తోడు నవ్వులు పూయగా కొత్త బట్టలు కట్టి కొత్త ఆశలు పెట్టగా ఇంటింటా మంగళం ఇంటింటా శాంతి ఉగాది శుభాకాంక్షలు అందరికీ సంతోషం! పార్వతీ శంకరుల ఆశీస్సులతో లక్ష్మీ నారాయణుల కృపతో ఆరోగ్యం సంపద విజయాలు కలగాలి ఈ సంవత్సరం సుఖమయం కావాలి! వచ్చెను ఉగాది... వచ్చెను ఉగాది... తెలుగు వారికి తెలుగు సంవత్సరం వచ్చెను శుభం శుభం అని అందరూ చెప్పండి ఆనందంగా జరుపుకుందాం ఉగాది పండగ!

Sunday, March 15, 2026

ரஷ்யா உக்ரைன் போரில் கற்ற பாடம்



ரஷ்யா உக்ரைன் போரில் கற்ற பாடம் இது, என் சொத்து என் உயிர் எல்லாம் நாட்டின் கையில் தான்! புகையாகி மறையும் ஒரு நொடியில், தேசம் வலுவாக இருந்தால் தான் நான் பாதுகாப்பு! என் சம்பளம், என் வீடு, என் கார், என் தொழில், தென்னந்தோப்பு, உறவுகள், கால்நடை எல்லாம்… நாடு பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே சொந்தம், இல்லையென்றால் ஒரு சிங்கிள் டீக்கு அலைவதற்கு நேரம் போதாது! உக்ரைன் மக்கள் இரண்டு மில்லியன் பேர், எல்லாம் விட்டு எல்லை தாண்டி அகதியானாரே… அண்டை நாட்டார் அடைக்கலம் கொடுத்த அதிர்ஷ்டம், நமக்கு அப்படி யார் இருக்கா? சொல்லு பாரு! ரஷ்யா உக்ரைன் போரில் கற்ற பாடம் இது, என் சொத்து என் உயிர் எல்லாம் நாட்டின் கையில் தான்! புகையாகி மறையும் ஒரு நொடியில், தேசம் வலுவாக இருந்தால் தான் நான் பாதுகாப்பு! மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்கதேசம், தெற்கே இந்தியப் பெருங்கடல், வடக்கே சீனா… நாட்டுக்குள் எண்ணற்ற துரோகிகள், அடைக்கலம் தர வேறு நாடு இல்லையே! எங்கே ஓடுவோம்? யாரிடம் கையேந்துவோம்? நினைத்துப் பாரு… இது உன் தாய்நாடு! மலிவான அரசியல், இலவசங்கள், வாக்கு வேட்டை… இவற்றை விட்டு வலுவான தேசத்திற்கு முன்னுரிமை கொடு! அரசுக்கு துணை நில், தேசத்துக்கு உயிர் கொடு, என் தேசம் என் பாதுகாப்பு – இது என் உறுதி! ரஷ்யா உக்ரைன் போரில் கற்ற பாடம் இது, என் சொத்து என் உயிர் எல்லாம் நாட்டின் கையில் தான்! புகையாகி மறையும் ஒரு நொடியில், **என் தேசம்… என் பாதுகாப்பு!** **என் தேசம்… என் பாதுகாப்பு!** **ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்!**

Saturday, March 14, 2026

நிதமொரு யுத்தம்... ஓயாத யுத்தம்

 நிதமொரு யுத்தம்... ஓயாத யுத்தம்

நிலம் – வளம் – கொள்ளைக்கான யுத்தம் உலகில் எல்லாப் போர்களும்... வளக் கொள்ளைக்கே... வளக் கொள்ளைக்கே... மிளகும் ஏலமும் மணம் தூவி வெள்ளைக்காரனை கரை சேர்த்தது ஞான ஒளியும் தவ ஒளியும் சீனரை இங்கு இழுத்து வந்தது
உழைப்பின் மாண்பும் உயர் குணமும் பாரசீகனை நிலை நாட்டியது எளிமை – பொறுமை – கருணை – இரக்கம் அன்பின் தொட்டிலாய் நம் நாடு ஜொலித்தது நிதமொரு யுத்தம்... ஓயாத யுத்தம் நிலம் – வளம் – கொள்ளைக்கான யுத்தம் தியாகம் தெய்வீகம் திரண்டு நின்று விருந்தோம்பல் மலர்ந்து பூத்தது பதிவிரதம் பெண்ணின் பெருமை உழைப்பும் அறமும் உலகை அழைத்தது
பன்முகம் தான் அமைதியின் வழி ஒற்றுமை தான் வாழ்வின் அடி இதை உலகிற்கு உணர்த்தியது நம் பாரத மண்ணின் பெருமைதான் எல்லாம் வணிகம்... எதுவும் வணிகம் சிரிப்பும் அழுகையும் வணிகமே அணைப்பும் அடியும் வணிகமே சேர்வதும் பிரிவதும் வணிகமே
மனிதன் பிறந்த கருவறையில் தொடங்கிய யுத்தம்... கல்லறையில் முடியாமல் நீண்டு கொண்டே இருக்குது... நிதமொரு யுத்தம்... நில வளங்களுக்கான யுத்தம்... உலகில் எல்லாமே... வளக் கொள்ளைக்கான யுத்தமே... ஒற்றுமை தான் வாழ்வின் அடி இதை உலகிற்கு உணர்த்தியது நம் பாரத மண்ணின் பெருமைதான்.

Tuesday, March 10, 2026

இரு சக்கரம் ஓட்டும் நண்பா... கவனம்... கவனம்... கவனம்.

இரு சக்கரம் ஓட்டும் நண்பா... மெதுவா போடா

வலது இடது பார்த்து... உயிரை காப்பாத்து போடா

வீட்டில் காத்திருக்காங்க... கண்ணீர் வைத்து நினைச்சு

அவசரப்பட்டு போனா... எல்லாம் போயிடும் ராஜா 


ஹெல்மெட் போடு மறக்காதே

சிக்னல் சிவப்புனா நில்லு தம்பி

முந்தி செல்ல நினைக்காதே

ஒரு வினாடி தப்பு... ஆயுசு முடிஞ்சு போகும்....  


கண்ணு முன்னாடி ரோடு தான்

பின்னாடி பார்க்கிற மிரர்-ல தான்

எதிராளி வரானோ... லாரி வருதோ

எல்லாத்தையும் பாரு... உயிர் முக்கியம்டா  


இரு சக்கரம் ஓட்டும் நண்பா... மெதுவா போடா

வலது இடது பார்த்து... உயிரை காப்பாத்து போடா 


பிள்ளை சிரிச்சு கை காட்டுது

அம்மா கதவு திறந்து நிக்குது

அப்பா போன் எடுத்து கேக்குறாரு

"எப்ப வருவே?"னு... குரல் நடுங்குது  

அந்த குரலுக்கு... உயிர் கொடு

அந்த சிரிப்புக்கு... பாதுகாப்பு கொடு

வேகம் குறைச்சு... புன்னகை வைச்சு

வீட்டுக்கு திரும்பு... பாதுகாப்பா வா  


ரோடு எல்லாருக்கும் பொதுவானது

ஆனா உயிர் உனக்கு ஒண்ணுதான்

அதை இழக்க வேண்டாம்... தயவு பண்ணு

போக்குவரத்து விதி... உன் கவசம்டா  


இரு சக்கர வீரரே... கவனமா ஓடு

வேகத்தை கட்டுப்படுத்து... உயிரை காத்துக்கோ

வீட்டுக்கு சிரிச்சு... திரும்பி வா

எல்லாரும் காத்திருக்காங்க... பாதுகாப்பா வா  


கவனம்... கவனம்... கவனம்...

உயிருக்கு மேலே... எதுவும் இல்லை...  

பாதுகாப்பு மட்டுமே... உன் வெற்றி


அவசரப்பட்டு போகாதே.

மருத்துவமனை நாட்கள் நீண்டு போகும். 


கவனம்... கவனம்... கவனம்...

உயிருக்கு மேலே... எதுவும் இல்லை...  

பாதுகாப்பு மட்டுமே... உன் வெற்றி


காத்திரு, நண்பா, சாலையில் செல்லும்போது— 

இடரினும் தளரினும் எனதுறுநோய்தொடரினும் உனகழல் தொழுதெழுவேன். திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே இதுவோ எமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப் புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார் வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே ...

Sunday, March 1, 2026

மயிலும் வாகனம் ஆகியதால், விரைந்து நீயும் வந்துவிடு!மயிலே, மயிலே என்றழைத்தால், அங்கே நீயும் இருப்பாயே

சூரர் படையை அழித்தவனே! தேவர் குலத்தை காத்தவனே. ! திருச்செந்தூர்க் கடலலை ஆண்டவனே! சூரன் உடலும் கிழிந்தவுடன், வேலும் மயிலும் ஆனதுவே.! சேவலை கொடியாய் பெற்றவனே, மயிலும் வாகனமாகியதே! மயிலும் வாகனம் ஆகியதால், விரைந்து நீ வந்துவிடு! மயிலே, மயிலே என்றழைத்தால், அங்கே நீயும் இருப்பாயே !

அவ்வை பாட்டியை சோதிக்க, நாவல் மரத்தின் மேலேறி, சுட்ட பழத்தை தந்தவனே ! சுகமாய் காட்சி தந்திடுவாய்......! மாங்கனி பெற வேண்டி., உலகை வலமாய் வந்தவனே.! அம்மை, அப்பனே, உலகம் என்று அண்ணனும் நமக்குச் சொன்னானே. ... அதுவும் உனக்கும் தெரியுமன்றோ, தெரிந்து நீயும் எமக்காகப், பழனி மலையின் மீதமர்ந்து பக்தருக்கு அருள அங்கு வந்தாய்..! தையல் நாயகி பெற்ற மகன் செல்வமுத்து குமரனவன் ! அழியா செல்வம் பெற்றிடவே, அருகில் என்றும் இருந்திடுவாய் ! முருகா, முருகா, வேல் முருகா, வெற்றிகள் தருவாய், வேல்முருகா! முருகா, முருகா, வேல் முருகா, வெற்றிகள் தருவாய், வேல்முருகா! வெற்றி வேலை பெற்றதினால், உன்னை பணியும் பக்தர்க்கு, என்றும் வெற்றி, வெற்றியன்றோ? வேல் வேல் முருகா, வேல் முருகா ! திருப்பரங்குன்றத்தில் கல்யாணம். தெய்வானையுடன் நடந்தது வே ! வாழ்த்திட வந்தனர், தேவர்களும், வாழிய, வாழிய, வாழியவே !

அதிகாலை சங்கின் நாதத்திலே, ஓம் என்னும் ஒலியே கேட்கிறது ! ஓங்கார பொருளும் ஆனவனே. ஹர ஹர சிவனே, சண்முகனே! பாம்பன் சுவாமிகள், அருணகிரி, தெய்வப் புலவன் நக்கீரன் , இவர்கள் பாட்டுக்கு வந்து விட்டாய், எங்கள் பாட்டுக்கும் வந்து விடு!

பாம்பன் சுவாமிகள், அருணகிரி, தெய்வப் புலவன் நக்கீரன் , இவர்கள் பாட்டுக்கு வந்து விட்டாய், எங்கள் பாட்டுக்கும் வந்து விடு! இச்சா சக்தி தெய்வானை, கிரியா சக்தி வள்ளியுடன் பழமுதிர் சோலையில் இருப்பவனே வாழுகிறோம் நாங்களும் வந்துவிடு !

அங்கே பாருங்கள் எல்லோரும் பச்சை மயிலும் தெரிகிறது வேலுடன் முருகன் வருகின்றார்! பச்சை மயிலும் தெரிகிறது வேலுடன் முருகன் வருகின்றார் ! ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே முருகா முருகா வேல் முருகா ! வெற்றிகள் தருவாய் வேல் முருகா ! முருகா முருகா வேல் முருகா வெற்றிகள் தருவாய் வேல் முருகா ! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

Tuesday, February 24, 2026

திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம்

அபிராமிபட்டர் அருளிய 

திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம்

திருக்கடவூரில் விநாயகர் கள்ள வாரண விநாயகர் என்ற பெயரில் அருள்புரிகிறார். ஒருமுறை விநாயகரை இந்திராதி தேவர்கள் வணங்க மறந்தனர். இதனால் அமிர்த கலசத்தை அவர் மறைத்து வைத்தார்.

அமிர்தம் கிடைக்காத தேவர்கள் விநாயகரை மறந்ததால் வந்த வினை இது என்பதனைப் புரிந்து விநாயகரை வணங்கி மீண்டும் அமிர்தத்தைப் பெற்றனர். இந்நிகழ்ச்சி நடந்த இடம் அபிராமி, அமிர்தக்கடேஸ்வரர் அருள்புரியும் திருக்கடவூர் ஆகும்.

“இவர் கள்ள விநாயகர். அமுதக் குடத்தை மறைத்து வைத்துபோல் அந்தாதியை மறைந்து விட்டால் என்ன செய்வது? அபிராமியைத் தொழுது அருள்பெற்ற அபிராமி பட்டர் இந்த விநாயகரை வணங்கிப் பாடிய திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம் இவரது சிறப்பினைக் கூறும். அமிர்தத்தை மறைத்ததால் இவர் கள்ள வாரண விநாயகரானார். அபிராமிப் பட்டர் அபிராமி அந்தாதியில் காப்புச் செய்யுளில் இவரைப் போற்றி வணங்குகிறார்.

ஈசனின் சந்நிதிக்கு வலதுபுறத்தில் நந்திக்கு அருகேயுள்ள வெளிப்பிரகாரத்தில் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி அருள்புரிறார். இவரை வழிபட நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தித்தை வழங்கி சுக வாழ்வினைத் தருவார்.

பங்கயத் தாளும் ஒருநான்கு தோளும் படாமுகமும் திங்களின் கோடும் வளர்மோ தகத்துடன் செங்கையிலே அங்குச பாசமு மாகிவந்(து) என்றனை ஆண்டருள்வாய்; வெங்கய மே!கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒருதொழிலைப் பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும்நின் பாதத்திலே நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ? விண்ணும் புகழ்கட வூர்வாழும் கள்ள விநாயகனே! யாதொன்றை யாகிலும் எண்ணிய போ(து) உன் இணைக்கமல் பாதம் பரவிய பேர்கட் கலாது பலித்திடுமோ? பேதம் தெரிந்த மறையோர் தமது பெருச்தெருவில் வேதம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! அரனென் பவனையும் அம்புயத் தோனையும் ஆழிசங்கு கரனென் பவனையுங் கைதொழ வேண்டி உன் கால்தொழுவார் இரவும் பகலும் இயலிசை நாடக மென்னும் நன்னூல் விரவுந் தமிழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! துதியேன் எனினும் தொழுகேன் எனினும் தொழுபவர்தமை மதியேன் எனினும் வணங்கேன் எனினும் வலியவந்து கதியே தரும்வழி காட்டிடுவாய்; நின் கருணையினால் விதியே புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! நாக ந்துரகம் பலபணி அடை நவநிதிகள் பாகஞ்சு மென்மொழியாள் போகமும் உன்றன் பாதமதில் மோகந் திகழப் பணிந்தோர்க்(கு) அலாமல் முயன்றிடுமோ? மேகம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! இளங்குஞ் சரச்செழுங் கன்றே! எனச்சொலி ஏத்திநின்றாய் உளங்கசிந் தங்கையால் குட்டிக்கொண் டோர்க்கோர் குறையுமுண்டோ? வளங்கொண்ட மூவர் தமைமறித் தேதமிழ் மாலைகொண்டு விளங்கும் புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! தண்டாயுதத்தையும் சூலாயுதத்தையும் தாங்கியென்னைக் கண்டாவிகொள்ள நான் வரும் வேளையில் காத்திடுவாய் வண்டாரவாரஞ்செய் மாமலர்ச்சோலை வளப்பமுடன் விண்தாவிய கடவூர் வாழும் கள்ள விநாயகனே மூவரும் தங்கள் தொழிலே புரிந்திட முந்திமுந்தித் தாவரும் நெற்றியில் தாக்கியுன் நாமத்தைச் சாற்றிடுவார்; தேவரும் போற்றிய தேவே! உனையன்றித் தெய்வமுண்டோ? மேவருஞ் சீர்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! மைப்பொரு வாரண மாமுக மீதினில் வாய்ந்ததுதிக் கைப்பொரு ளே! என்று கைதொழு வோர்குன் கருணைவைப்பாய்; பொய்ப்பணி யோஅறி யாதமு தீசன் புகழுமெங்கள் மெய்ப்பொரு ளே!கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!


Happy Uagadi

వచ్చెను ఉగాది వసంతం వచ్చెను మావి చిగురులు కొత్తగా మొలిచెను పచ్చడి తీసి పంచుకుందాం ఆనందం కొత్త సంవత్సరం శుభమైన శుభాకాంక్షలు! చిగురాకులు తీపి...